பிரிவிடல் (திருத்த) சட்டமூலத்தை ஆராய்ந்து அங்கீகரித்த நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு |
திகதி : | 2024-02-29 |
1977ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பிரிவிடல் (திருத்த) சட்டம் காலத்துக்குப் பொருத்தமற்ற சட்டம் என அடையாளம் காணப்பட்டிருப்பதால் இதனைத் திருத்துவதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தங்களை நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனத்தில் எடுத்தது.
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தலைமையில் அண்மையில் (பெப். 21) கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்படி, தற்போதுள்ள சட்டத்தில் உள்ள தொடர்புடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் பலனாக காணியில் அக்கறைகொண்டுள்ள எல்லா ஆட்களுக்கும் அத்தகைய பிரிவிடல் வழக்குப் பற்றி அறிய வருவதை இயலச் செய்வதற்கு பதாகையொன்றை வெளிக்காட்டிவைத்தல் மற்றும் ஒலிபெருக்கியொன்றைப் பயன்படுத்தி பகிரங்க அறிவித்தல்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வதன் மூலம் திருத்தப்படுகிறது. நிலஅளவிடுகைக்கு சமுகமாயிருந்த தரப்பினரால் செய்யப்பட்ட உரிமைக்கோரிக்கையின் தன்மையை சத்தியக்கடுதாசியில் குறிப்பிடுவதற்கு நிலஅளவையாளர் தேவைப்படுத்துவது போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு, பிரிவிடல் (திருத்த) சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு துறைசார் மேற்பார்வைக் குழு அங்கீகாரம் வழங்கியது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே மற்றும் கௌரவ கே.பி.எஸ்.குமாரசிறி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








