இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பாபண்டார தெரிவு

திகதி : 2023-12-10

மனித உரிமைகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார். இவ்வொன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் அண்மையில் (டிச. 07) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜயந்த சமரவீர பிரேரித்ததுடன் அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதயன கிரிந்திகொட வழிமொழிந்தார். அத்துடன், ஒன்றியத்தின் இணை உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ லலித் எல்லாவல ஆகியோர்  நியமிக்கப்பட்டனர்.

ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அடிப்படையாக மனித உரிமைகள் தொடர்பில்  ஒன்றியத்துக்கு புரிதலைப் பெற்றுக்கொள்வதன் தேவையை நினைவு படுத்தினார்.  அதற்கமைய, மனித உரிமை தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற வளவாளர் ஒருவரை அழைத்து தெளிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத், கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ, கௌரவ வீரசுமன  வீரசிங்க,கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, கௌரவ ஜயந்த சமரவீர, கௌரவ லலித் எல்லாவல மற்றும் கௌரவ உதயன கிரிந்திகொட ஆகியயோர்  கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom