இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக வசந்த யாப்பாபண்டார தெரிவு

திகதி : 2023-12-08

மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார். ஒன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் அண்மையில் (டிச. 06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் பிரேரித்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிமல் பியதிஸ்ஸ வழிமொழிந்தார்.

அதன்பின்னர், கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் கௌரவ நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் ஒன்றியத்தின் இணை உப தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

மலைநாடு மற்றும் மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பில் ஒன்றியத்தின் புதிய தலைவர் வலியுறுத்தியதுடன், ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன், கௌரவ வருண லியனகே, கௌரவ டபிள்யு.எச்.எம். தர்மசேன, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ அப்துல் ஹலீம், கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom