இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டக வரைபு தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு

திகதி : 2023-11-25

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகம் (National Education Policy Framework) தொடர்பான அறிக்கை தொடர்பில் கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

கல்வி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் (நவ. 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில், பிரதமரின் செயலாளரும் தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவைக் குழுவின் தலைவருமான அனுர திசாநாயக்க இதுபற்றிய விளக்கத்தைக் குழுவுக்கு வழங்கினார்.

அதற்கமைய, தேசியக் கல்வியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மேற்கொள்ள எதிர்பார்க்கும் பிரதான மாற்றங்களின் சாராம்சம் தொடர்பில் பல்வேறு துறைகளில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ விமலவீர திசாநாயக்க, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ மஞ்சுளா திசாநாயக்க மற்றும் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  

அத்துடன், கல்வி அமைச்சு, தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் இந்த உருவரைச்சட்டகத்தை தயாரிப்பதில் தொடர்புபட்ட பங்குதாரர்களும் கலந்துகொண்டனர். மேலும், குழுவின் இளைஞர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் குழுவின் தலைவரின் அனுமதிக்கமைய அவர்களின் கருத்துக்களும் குழுவில் முன்வைக்கப்பட்டன.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom