இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேர்தல் முறைமை தொடர்பான நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்

திகதி : 2022-03-23

உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (22) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக இந்தக் குழுவில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், இது தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்களின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது பொருத்தமானது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. அதற்கமைய நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்று எதிர்வரும் ஏப்ரல் 07 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த விசேட குழுவில் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுரகுமார திசாநாயக்க, கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார, கௌரவ விமல் வீரவன்ச, கௌரவ ரவுப் ஹக்கீம், கௌரவ கபீர் ஹஷீம், கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ மனோ கணேஷன், கௌரவ மதுர விதானகே மற்றும் இந்த விசேட குழுவின் செயலாளர் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom