மூன்று ஊடக நிறுவனங்கள் நாளை (26) பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளன |
திகதி : | 2021-11-25 |
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் மூன்று ஊடக நிறுவனங்கள் நாளை (26) சாட்சியமளிக்கவுள்ளன.
அதற்கமைய, டெல்ஷான் ஊடக வலையமைப்பு, வொய்ஸ் ஒப் ஏசியா ஊடக வலையமைப்பு மற்றும் எம்.டீ.வீ. ஊடக வலையமைப்பு ஆகியன சாட்சியமளிக்கவுள்ளதாக குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.
பாராளுமன்ற விசேட குழுவின் தலைவரும், சபை முதல்வருமான அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் பிற்பகல் 02.00 மணிக்கு குழு கூடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






