ஸ்ரீ லங்கன் விமான சேவை எதிர்வரும் 07 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் |
திகதி : | 2021-10-04 |
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை ஒக்டோபர் 07 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
அதற்கமைய, வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி கோப் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் கோப் குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. அது தொடர்பில் குழு உறுப்பினர்களின் விசேட கூட்டம் எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 06 ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
உரிய சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக, தேவையான அதிகாரிகளை ஒன்லைன் ஊடாகவும் இணைத்துக்கொண்டு கோப் குழுக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






