இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

காணி அளவீடுகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்கத் தீர்மானம் - காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

திகதி : 2021-03-24

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுடத்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற காணி விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
விசேடமாக காணிகளை அளவிடும் செயற்பாடுகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்பதுடன், இதனால் நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றை நாடு முழுவதும் முன்னெடுக்க முன்னெடுப்பது பொருத்தமானது என இக்குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த காணி அமைச்சின் அதிகாரிகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையொன்று பரீட்சார்த்தமாக திரப்பணே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினர்.

அத்துடன், ‘பிம் சவிய’ காணிகளை பிழையற்ற முறையில் அளவீடு செய்து விரைவில் அவற்றக்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறான காணிகளில் உள்ள பொது மக்கள் வங்கிகளில் கடன்களைப்பெறும்போது கூட பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும், 15-20 வருடங்களாக இந்தப் பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி, காணிகளை அளவிடுவதற்கு விரும்பும் காணி உரிமையாளர்களின் காணிகளை விரைவில் அளவீடு செய்து அவர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், காணி உரிமைப் பத்திரங்களைக் கொண்டிருக்காத விகாரைகள் போன்ற மதஸ்தலங்களுக்காக அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். விசேடமாக உரிமைப் பத்திரங்களைக் கொண்டிராத சுமார் 325 விகாரைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு விகாராதிபதி எனும் பதவியின் பெயரில் உரிமைப் பாத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர்.

மேலும், கிளிநொச்சி பிரதேசத்தில் காணப்படும் சில காணிகள் தொடர்பான சிக்கல்கள், காணிகளை அளக்கும் பணிகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களை குறைத்தல், அதிகாரம்பெற்ற நில அளவையாளர்களின் பணிகளை அரச தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்படாமை தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஏனைய பிரதேச ரீதியாக காணப்படும் காணி தொடர்பான சிக்கல்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பது.
இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான மாயாதுன்ன சிந்தக அமல், சார்ள்ஸ் நிர்மலநாதன், சுதத் மஞ்சுள, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, ரோஹன திசாநாயக்க, அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம். முஷாரப், மஞ்சுளா திசாநாயக்க, காதர் மஸ்தான், முதிதா டி. சொய்ஸா, குணாதிலக ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom