இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையில் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதற்காக அதன் விதப்புரைகளை ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் மூன்றாவது பிராந்திய மாநாடு

திகதி : 2019-02-26

இலங்கையில் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதற்காக அதன் விதப்புரைகளை ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் மூன்றாவது பிராந்திய மாநாட்டை கௌரவ பாராளுமன்ற சபாநாயகரின் தலைமைத்துவத்துடனும் அனைத்து மதங்களையும் சேர்ந்த வணக்கத்திற்குரிய மதகுருமார், தெரிகுழுவை / காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அலுவலர்கள் ஆகியோரின் பங்கேற்புடனும் 2019, மார்ச் 01 ஆம் திகதி, மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 2.30 மணி வரை காலி, ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் நடத்துவதற்கான அனைத்து ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

“இலங்கையின் நிலைபெறுதன்மையை நோக்கிய இன மற்றும் மத ஒற்றுமை” என்னும் கருப்பொருளின் கீழ் நடத்தப்படவுள்ள இந்த மாநாட்டில் இலங்கையின் இன மற்றும் மத சகவாழ்வு மீதான பிராந்திய முக்கியத்துவத்துடனான பல விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படும்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom