இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-11 |
|---|
| கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
தேயிலை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய நடைமுறையின் கீழ் உரம் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
ஒத்திவைப்புப் பிரேரணைகள்
அறிமுகம்
பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல்
பாராளுமன்றம் அடுத்துறு அமர்வு தினம் வரை ஒத்திவைக்கப்படும்.
எனினும், 48 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்படுகையில், பிரதம அமைச்சர் சபாநாயகரை வேண்டிக்கொள்வதன் மீது பாராளுமன்றத்தை ஒத்திவைக்க இயலும்.
நாளொன்றுக்கான பிரதான அலுவல்கள் முடிவுற்றதும் பாராளுமன்றம் அடுத்துறு தினத்திற்கு ஒத்திவைக்க முன்னர் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றை விவாதிப்பதற்கு அரை மணித்தியால நேரம் ஒதுக்கப்படுகிறது.
ஒத்திவைப்புப் பிரேரணைகளின் வகைகள்
| அ. | அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான விவாதம் (பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19 ஐப் பார்க்க.) |
| ஆ. | சபையின் பிரதான அலுவல்கள் முடிவுற்ற பின்னர் “சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை” களுக்காக அரை மணித்தியாலத்தை ஒதுக்குதல். (பாராளுமன்ற நிலையியற் கட்டளை 20 ஐப் பார்க்க.) |
| இ. | பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய சமர்ப்பிக்க முடியுமான பிரேரணைகள். |
ஒத்திவைப்புப் பிரேரணைகள்
(பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19)
இத்தகைய ஒத்திவைப்புப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் சபாநாயகரின் இணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எழுத்துமூலமான அறிவித்தலொன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாராளுமன்றத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில், 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து அத்தகைய வேண்டுகோளுக்கு ஒத்திசைவு வழங்குவதன் மீது அத்தகைய பிரேரணையைச் சமர்ப்பிக்க முடியும்.
அவ்வாறு அனுமதி பெற்ற பிரேரணையொன்றை பி.ப. 5.00 மணிக்கு சமர்ப்பிக்க முடியும். ஏதேனும் தினமொன்றில் அத்தகைய பிரேரணை ஒன்றுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க இடமளிக்கப்படும்.
மேலும், சபாநாயகர் இணக்கந் தொிவிக்க நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில், அப்பிரேரணையில் அனுமதி வழங்கப்பட்ட பிரிவை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசிப்பதற்கு இடமளிக்கப்படும். நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை சபாநாயகர் சபையில் எடுத்தியம்புதல் வேண்டும்.
விதிகளும் நடைமுறைகளும்
பாராளுமன்ற அமர்வின் போது, அத்தினத்திற்கான பிரதான அலுவல்கள் முடிவுறுகையில் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினரொருவரால் சமர்ப்பிக்க முடியும்.
அத்தகைய சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படுவதுடன், அது அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகவிருத்தலும் வேண்டும்.
சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையின் மீது கேள்விகளைக் கேட்பதற்கும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் ஏற்பாடுகள் உள்ளன.
அத்தகைய பிரேரணையொன்று அல்லது கேள்விகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமையாவிடின் அதற்கு சபாநாயகர் இடமளிக்காதிருக்க முடியும்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பற்றிய விவாத காலத்தில் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணையொன்று அல்லது சபை ஒத்திவைப்பின் போதான கேள்விகளுக்கு 30 நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கப்படும்.
சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணையொன்றை சமர்ப்பிக்க எதிர்பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினரால் அரசாங்கக் கட்சியின் பிரதான முதற்கோலாசான் அல்லது எதிர்க்கட்சியின் பிரதான முதற்கோலாசான் ஊடாக அதற்கு முந்திய தினம் ந.ப. 12.00 மணிக்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலமாகச் சமர்ப்பித்தல் வேண்டும்.
பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் அதன் பிரதியொன்றை ஏற்புடைய அமைச்சுக்கு ஆற்றுப்படுத்துவதற்காக பாராளுமன்றச் சபை முதல்வருக்கு ஆற்றுப்படுத்தப்படும்.
எனினும், அத்தகைய பிரேரணையில் அடங்கியுள்ள விடயங்கள் நீதிமன்றமொன்றின் தீர்ப்புக்குள்ளாகவுள்ள அல்லது பாராளுமன்றத்தில் ஒரே கூட்டத்தொடரில் அதேபோன்ற பிரேரணையொன்று விவாதிக்கப்பட்டிருப்பின் அதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
எவரேனும் பாராளுமன்ற உறுப்பினரொருவர் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணையொன்றைச் சமர்பிக்கும் போது வேறொரு பாராளுமன்ற உறுப்பினரால் வழிமொழியப்படுதல் வேண்டுமென்பதுடன், விவாத இறுதியில் ஏற்புடைய விடயத்திற்கு் பொறுப்பான அமைச்சரால் அதற்கு விடையளிக்கப்படுவதுடன், விவாதத்தின் போது அரசாங்கக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பவற்றின் பொருட்டு 30 நிமிடங்கள் வீதம் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.
சபை ஒத்திவைப்பின் போதான விவாதம் பற்றிய வாக்கெடுப்புக்கான சந்தர்ப்பம் இல்லை.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இணக்கப்பாட்டுக்கமைய விவாதத்திற்கெடுத்துக் கொள்ளப்படும் ஒத்திவைப்புப் பிரேரணை
அரசியற் கட்சித் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளால் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்தின் பொருட்டு, தினம் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டுக் கொண்ட பின்னர், ஒரு மணித்தியாலத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு அல்லது முழு நாள் விவாதம் ஒன்றை ஒதுக்கி ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த முடியும்.
ஒத்திவைப்பு பிரேரணைகளின் உபயோகம்
பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த குறிப்பிட்டதொரு விடயம் தொடர்பாக குறுகிய அறிவித்தலுடன் பாராளுமன்றத்தினதும் ஏற்புடைய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் கவனத்தை ஈர்க்கும் வழிமுறையொன்றாகும்.
தனி உறுப்பினர் பிரேரணைகள்
தனியார் உறுப்பினர் என்பது, சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பிரதம அமைச்சர், அமைச்சரவையின் அமைச்சர்கள், அமைச்சரவையல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகிய எந்தவொரு பதவியையும் வகிக்காத உறுப்பினர் ஆவார்.
எவரேனும் தனியர் உறுப்பினரால் சமர்ப்பிக்கப்படும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய விடயங்கள் பற்றிய பிரேரணை தனியார் உறுப்பினர்களின் பிரேரணை என அறியப்படும். அத்தகைய பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.
அவ்வாறான பிரேரணைகள் முதலாவதாக பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படல் வேண்டும். தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் விவாதத்திப்பதற்குக் குறிப்பீடு செய்த தினத்திற்கு முன்னர் பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் அல்லது அனுபந்தத்தின் மூலம் அவை கிடைக்கப்பெறும் ஒழுங்கில் அறிவிக்கப்படும்.
எல்லா மாதங்களிலும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் முதலாவது வாரத்தின் வெள்ளிக்கிழமை தனியார் உறுப்பினர்கள் பிரேரணைகள் முன்னுரிமை பெறும்.
எனினும், தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுக்கப்படுவது பற்றி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்படும்.
சபாநாயகரினால் உறுப்பினரின் பெயர் அழைக்கப்பட்ட பின்னர், அவர் பிரேரணையைச் சமர்ப்பிப்பார். பின்னர் வேறொரு உறுப்பினரால் அப்பிரேரணை வழிமொழியப்பட்டு விவாதிக்கப்படும். இருந்தும் ஏற்புடைய உறுப்பினர் வருகை தந்திராவிடின், முறையாகத் தத்துவமளிக்கப்பட்ட வேறொரு உறுப்பினர் அத்தகைய உறுப்பினரின் அப்பிரேரணையைச் சமர்ப்பிக்க முடியும். இல்லையேல் அப்பிரேரணை வறிதாகும்./p>
பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய, தனியார் உறுப்பினரொருவரின் 10 பிரேரணைகள் மாத்திரம் அவரின் பெயரில் பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் அல்லது அனுபந்தத்தில் சோ்த்துக்கொள்ளப்படும்.
தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகளை விவாதிப்பதற்கான நேர ஒதுக்கீடு
தனியார் உறுப்பினர் பிரேரணைகள் அனைத்தும் சபையில் ஒரு மணி நேரம் விவாதிக்கப்படும். பிரோிக்கும் உறுப்பினருக்கு 10 நிமிடங்களும் வழிமொழியும் உறுப்பினருக்கு 05 நிமிடங்களும், ஏனைய உரை நிகழ்த்தும் உறுப்பினர்களுக்கு 05 நிமிடங்களும் பதில் வழங்குவதற்கு ஏற்புடைய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு 10 நிமிடங்களும் பிரோித்த உறுப்பினருக்கு மீண்டும் 05 நிமிடங்களும் என்றவாறு குறிப்பிட்ட ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.
ஏதேனும் தனியார் உறுப்பினர் பிரேரணையொன்று அங்கீகரிக்கப்பட்டோ அல்லது அங்கீகரிக்கப்படாமலோ பாராளுமன்றக் கூட்ட அறிக்கையில் சோ்த்துக்கொள்ளப்படும்.
ஏற்புடைய தினத்திற்குரிய தனியார் உறுப்பினர் பிரேரணையின் விவாதத்திற்குப் பின்னர் மேலும் பின்னொரு தினத்தில் விவாதிப்பதற்கு எஞ்சியுள்ள பிரேரணைகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கமைய அறிவிப்பதன் பொருட்டு தனியார் உறுப்பினர் பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படும் வெள்ளிக்கிழமையன்றே அடுத்த தினம் வரை அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் அல்லது அனுபந்தத்தில் சோ்த்துக்கொள்ளப்படும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்















