இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-11 |
|---|
| கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —• 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
தேயிலை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய நடைமுறையின் கீழ் உரம் – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் |
2025-09-18 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
பாராளுமன்ற அமர்வு நாட்களும் நேரங்களும்
பாராளுமன்ற அமர்வு நாட்கள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 8(1) இல் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக, பாராளுமன்றம் வேறுவிதமாகத் தீர்மானித்தாலன்றி, ஒரு மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்துவரும் வாரத்திலும் ஒன்றுவிட்ட அடுத்த வாரத்திலுமாக இரு வாரங்களிலும் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும். அத்தகைய முதலாவது மூன்றாவது வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும்.
ஆயினும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 75 இன் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றம் இருபத்தாறு நாட்கள் கூட வேண்டும். எனினும், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அங்கீகாரத்திற்கு அமைய இவ்வொதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்.
பாராளுமன்ற அமர்வு நேரங்கள்
பாராளுமன்றத்தில் 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, 2023 ஆகஸ்ட் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வு நேரங்கள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மு.ப. 9.30 முதல் பி.ப. 12.30 வரையும் பி.ப. 1.00 முதல் 5.30 வரையுமாகும்.
மேற்சொன்ன வண்ணம் பாராளுமன்றம் பின்வருமாறு கூடுகின்றது:-
(செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்)
| மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 10.30 முதல் பி.ப. 12.30 | சபையின் பிரதான அலுவல்கள் |
| பி.ப. 1.00 முதல் பி.ப. 5.00 | |
| பி.ப. 5.00 முதல் பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (2 வினாக்கள்)/ ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 முதல் பி.ப. 01.00)
ஒவ்வொரு மாதத்தினதும் முதல் அமர்வு வாரத்தில் புதன்கிழமை நாட்களில், பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மணித்தியாலத்தில் அரை மணித்தியாலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன வண்ணம், வினா மணித்தியாலம் பின்வருமாறு அமைகிறது:-
புதன்கிழமைகளில்
| மு.ப. 9.30 முதல் மு.ப. 10.00 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (4 வினாக்கள்) |
| மு.ப. 10.00 முதல் மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
பாராளுமன்ற விவாதங்களுக்கான விதிகள்
பாராளுமன்றத்தின் முறையான செயற்பாடுகளுக்கு வகைசெய்யும் முகமாக விதிகளும் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்படுகின்றன.இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சபையில் விவாதங்களின் தரத்தை உயர்த்த முடியும். சட்டங்களை நிறைவேற்றுவதிலும்,வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதிலும் ஏனைய விடயங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதங்களில் பங்குபற்ற வேண்டியிருக்கின்றது. பாராளுமன்ற முறைமையில், சபையில் எல்லா நோக்குகளும் கருத்துக்களும் எண்ணங்களும் கருத்துப் படிவங்களும் ஓர் ஒழுங்குக் கிரமத்தில் எழுப்பப்படுகின்றன. அதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முடிவுகள் எட்டப்படுகின்றன.
பேசும் உறுப்பினர் எப்போதும் சபாநாயகரையே விளிக்க வேண்டும். அவர் பேசும்போது எழுந்து நிற்க வேண்டும். உறுப்பினர்கள், தொடர்பற்ற விடயங்களைப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கூறியது கூறலில் ஈடுபடக்கூடாது என அவர்கள் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்கள் முறையற்ற நோக்கங்களை மற்ற உறுப்பினர்கள் மீது சாட்டக்கூடாது. நீதிமன்ற விசாரணையில் உள்ள விடயங்களைப் பற்றியும் பேசக்கூடாது. எந்தப் பிரேரணை மீதும் அல்லது சட்டமூலம் மீதும் பிரேரணை பிரேரித்தவரைத் தவிர்ந்த மற்ற உறுப்பினர்கள் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால், சபையின் குழுநிலையில் ஓர் உறுப்பினர் ஒரு தடவைக்கு மேல் பேச அனுமதிக்கப்படலாம். அத்துடன் பாதிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் சபையில் அதற்கான பிரேரணை இல்லாதவிடத்தும் தனிப்பட்ட விளக்கத்தைச் செய்ய உரித்துடையவராயிருக்கிறார். ஆனாலும் இந்த விளக்கங்களிலே விவாதங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பாராளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளைப் பாவியாது இருப்பதற்கு உறுப்பினர்கள் விசேட கவனம் எடுக்க வேண்டும்.டும்.
உறுப்பினர்கள் கண்ணியமான முறையில் சபையில் பிரவேசிப்பதுடன், அவசியமில்லாமல் சபையைக் கடக்கவும் கூடாது. சபையின் உள்ளே புதினப் பத்திரிகைகள், புத்தகங்கள், கடிதங்கள் என்பனவற்றை வாசிக்க அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அமைதியாக இருப்பதுடன் சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் வழிவிட்டாலொழிய அவரைக் குழப்பவும் கூடாது. சபையில் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை விளக்கிக் காட்டப் பல்வேறு பொருட்களையும் கொண்டு வர முடியாது. கையடக்கத் தொலைபேசிகளும் ஒலிப்பதிவு உபகரணங்களும் சபையினுள் அனுமதிக்கப்படமாட்டா.
இழிவாான அல்லது வெறுக்கத்தக்க குறிப்புக்களை வாபஸ் பெறுமாறு உறுப்பினரை சபாநாயகர் கேட்கலாம். விரும்பத்தகாத சொற்களை அதிகாரபூர்வப் பதிவுகளிலிருந்து (ஹன்சாட்) நீக்கவும் சபாநாயகரால் முடியும். சபை நடவடிக்கைகளைக் குழப்புவதில் அல்லது தடையேற்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபடும் உறுப்பினரை அவர் எச்சரிக்கலாம். குழப்பும் உறுப்பினரை சபையிலிருந்து அகற்றும்படி படைக்கலச் சேவிதரைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது பெயர் குறிப்பிடலாம். ஓர் உறுப்பினர் சில வாரங்களுக்குச் சபையிலிருந்து தடுத்து வைக்கப்படலாம். ஓர் உறுப்பினருடைய நடத்தை முற்றும் ஒழுங்கீனமானதாக இருந்தால் சபாநாயகர் அவரை நாளின் மிகுதியான அமர்வில் பங்குபற்றாது தடை செய்து பாராளுமன்றத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டளையிடலாம்.
அரசாங்க மற்றும் எதிர்க் கட்சி முதற்கோலாசான்களே உரையாற்றுவோரின் நிரல்களைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக இருக்கின்றார்கள். இந்த நிரல்கள் முன்னதாகவே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுச் சபாநாயகர் அந்த உறுப்பினர்களைச் சபையில் பேசும்படி அழைப்பார்.
சபை நடவடிக்கைகளில் ஒழுங்கு மீறப்பட்டதாக ஓர் உறுப்பினர் உணர்ந்தால், அவ்விடயத்தை அவர் அவ்வப்போது எழுப்ப முடியும். ஒழுங்குப் பிரச்சினை எழுப்பப்படும்போது சபையில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் அவருக்கு இடமளிக்க வேண்டும். சபாநாயகரோ தலைமைதாங்கும் உறுப்பினரோ தன் முடிவை அறிவித்த பின்னர் உறுப்பினர் தமது பேச்சை மீண்டும் ஆரம்பிக்கலாம்.
விவாதத்தின் இறுதியிலே உறுப்பினர்கள் தங்கள் சம்மதத்தை அல்லது எதிர்ப்பை "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்வதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஓர் உறுப்பினர் வாய்மூலம் முடிவு தெரிவிப்பில் திருப்தி கொள்ளாது விடின் வாக்கெடுப்பைக் கோரலாம். வாக்கெடுப்பானது நிரை நிரையாக சார்பானவர்களையும் எதிரானவர்களையும் எண்ணுவதன் மூலமோ அல்லது அவர்களின் பெயர்களை அழைத்து அவர்களின் விருப்பைப் பதிவு செய்வதன் மூலமோ நடாத்தப்படலாம். எந்த வழியில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிப்பது சபாநாயகரைப் பொறுத்தது.
கூட்ட நடப்பெண்ணானது தலைமைதாங்கும் உறுப்பினர் உட்பட இருபது உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும். கூட்ட நடப்பெண் காணப்படாத சமயத்தில், இந்த விடயம் தலைமைதாங்கும் உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால் அழைப்பு மணி ஒலிக்கச் செய்து, பின்பு ஐந்து நிமிடங்களின் முடிவிலும் கூட்ட நடப்பெண் காணப்படாத பட்சத்தில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பார்.
எவ்வாறு வாக்களிப்பது?
சபையின் தீர்ப்பு குறித்த பிரேரணையொன்றிற்கு தேவைப்படுமிடத்து அப்பிரேரணை உறுப்பினர்களின் அங்கீகாரத்திற்காக அல்லது நிராகரிப்பிற்காகச் சபைக்கு விடப்படும். ஒவ்வொரு உறுப்பினரினது தீர்ப்பும் வாக்கெடுப்பொன்றின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும். வாக்கெடுப்பானது சபை அமர்வில் உள்ளபோது மட்டுமே நடத்தப்படலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு வாக்கிற்கு உரிமையுடையவரென்பதோடு, அவர் அதனைத் தனிப்பட்ட வகையில் பிரயோகிக்கவும் வேண்டும். வாக்களிக்கும்போது, உறுப்பினர் தனக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதற்கான உரிமை இருப்பதோடு, விரும்பினால் வாக்களிக்காமலும் விடலாம். பாராளுமன்றத்தில், வாக்கெடுப்பு நான்கு வெவ்வேறு வழிகளில் நடத்தப்படலாம். அவையாவன:
அ. குரல் மூல வாக்கெடுப்பு
குரல் மூல வாக்கெடுப்பே மிகவும் பொதுவான வாக்கெடுப்பு முறையாகும். நிலையியற் கட்டளை 47(1) இன்படி, சபாநாயகர் ஒரு விடயத்தைச் சபைக்கு விடும்போது, ஒரு தீர்மானத்திற்குச் சார்பானவர்கள் "ஆம்" என்பர், எதிரானவர்கள் "இல்லை" என்பர். சபையின் கருத்துப் போதுமான அளவிலும், தெளிவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதெனச் சபாநாயகர் உணருமிடத்து, அவர் அதனைச் சபைக்கு அறிவிக்கலாம். சபாநாயகரின் தீர்ப்பில் ஓர் உறுப்பினர் திருப்தி கொள்ளாதவிடத்து, அவர் வாக்கெடுப்பொன்றைக் கோரலாம்.
ஆ. எழுந்து நின்று வாக்களித்தல்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 47(2) (அ) இல் குறிப்பிடப்பட்டவாறு வாக்கெடுப்பு நடத்தப்படலாம். உறுப்பினர்கள் தமது ஆசனங்களுக்குரிய வரிசைகளிலிருந்து எழுந்து நின்று சபை முன்னே வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்கை பயன்படுத்தமுடியும் என்பதோடு பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அம்முடிவு சபைக்கு அறிவிக்கப்படும்.
இ. இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களித்தல்
உறுப்பினர்கள் சபாநாயகர் அனுமதிக்கும் நேரத்திற்குள் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 47(2) (ஆ) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்ற இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைமையூடாக வாக்களிக்கும் செயற்பாட்டின் மூலம் தமது வாக்கை பிரகடனப்படுத்தலாம்.
ஈ. பெயர் மூல வாக்கெடுப்பு
பெயர் மூல வாக்கெடுப்பிற்கான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டவிடத்து, நிலையியற் கட்டளை 47 (2) (இ) இல் குறிக்கப்பட்டுள்ளவாறு சபாநாயகர் நடவடிக்கை மேற்கொள்வார். இதன்போது, வாக்கெடுப்பிற்கான மணி ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கப்பட வேண்டுமென்பதோடு, வாக்கெடுப்பு, பெயர் மூலம் நடாத்தப்படுதலும் வேண்டும். செயலாளர் நாயகம், ஒவ்வொரு உறுப்பினரும் எவ்வாறு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை அவர்களிடம் தனித்தனியே கேட்பதன் மூலமும் அதன்படி வாக்குகளைப் பதிவதன் மூலமும் வாக்கெடுப்பை நடத்துவார். செயலாளர் நாயகம் முதலாவதாகப் பிரதம அமைச்சரையும் அதன் பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோரிடமும் அதன் பின்னர் ஏனைய உறுப்பினர்களிடமும் அவரவர் பெயர்களின் அகர வரிசை ஒழுங்கிலும் வாக்களிப்பை நடத்துவார். ஓர் உறுப்பினர் தான் வாக்களிக்க மறுப்பதாகக் கூறினால் அது செயலாளர் நாயகத்தினால் அவ்வாறான சந்தர்ப்பத்தில், அத்தகைய உறுப்பினரின் பெயர் வாக்களிக்க மறுத்தவராகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும். வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் முடிவு சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்பதுடன் சபாநாயகரினால் அவ்வாகெடுப்பில் சார்பாகவும் எதிராகவும் அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சபைக்கு அறிவிக்கப்படும். வாக்களிப்பு எண்ணிக்கை சமமானதாக இருப்பின் சபாநாயகர் தீர்மான வாக்கொன்றை அளித்ததன் பின்னர், முடிவை அறிவிக்கலாம்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்















