இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு

2025-09-18
1
இலங்கையின் தற்போதைய மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், நிதி ஸ்திரத்தன்மை, நிலைபேறான தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்பவற்றுடன் இணங்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டண முறை குறித்து அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் செலவு மீட்பு மற்றும் செலவுப் பிரதிபலிப்பு ஆகிய இரண்டும் வலுவான மற்றும் வெளிப்படையான மின்சாரத் துறைக்கு இன்றியமையாத கொள்கைகள் என கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டினர். IMF - நீடிக்கப்பட்ட நிதி வசதி (EEF) திட்டத்துடன் இணைந்தாக மின்சாரக் கட்டண முறையை மறுபரிசீலனை செய்வதற்காக IMF பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. 2025 நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு முன்நிபந்தனை நடவடிக்கையாக இது பரிந்துரைக்கப்பட்டதால் திருமதி டெல்ஃபைன் பிரடி (FAD இன் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்) தலைமையிலான குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஏனைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.  இந்தத் தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் கௌரவத் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கௌரவ தலைவர் கபீர் ஹஷீம், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பாலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, திலின சமரகோன், திலித் ஜயவீர, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.  செலவு மீட்பானது சம்பந்தப்பட்ட துறை அதன் மொத்தச் செலவினங்களை ஈடுகட்டுவதை உறுதிசெவதன் மூலம் வினைத்திறனின்மைகளைத் தடுத்து, நவீனமயமாக்கலுக்குத் தேவையான முதலீடு மற்றும் கடன் ஈர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும் என கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டது. இதேவேளை, செலவுப் பிரதிபலிப்பு என்பது நுகர்வோர் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உண்மையான செலவின் அடிப்படையில் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, நியாயமற்ற இடை-மானியங்களைக் குறைப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், செலவுகளை மீட்டெடுக்காவிட்டால், வினைத்திறன் இன்மைகள் பெருகி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகள் இல்லாமல் போகும் என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கு தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இதனை அடைவதற்கு இலங்கை சரியான உட்கட்டமைப்பு, நிதி மற்றும் ஊக்குவிப்புக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தினர். சூரிய சக்தி, நீர்மின்சக்தி மற்றும் காற்றாலை வலுசக்தி என்பவற்றை விரிவுபடுத்துவதுடன், களஞ்சிய மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைந்த முதலீடுகள் அத்தியாவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. அனல் மின்சாரம் தொடர்ந்து ஒரு பங்கை வகித்தாலும், அது மிகவும் விலையுயர்ந்தது என்றும் உலகளாவிய விலை அதிர்ச்சிகளுக்கு உள்ளாகின்றமையால் மிகவும் நிலையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உயர்ந்தளவிலான போட்டித்தன்மை வாய்ந்தது என்றும் ஆனால் அதற்கு முன்கூட்டிய முதலீட்டுத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. நிலையற்ற உற்பத்திச் செலவுகள், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது என இங்கு எச்சரிக்கப்பட்டது. திடீர் செலவு அதிகரிப்புகள் வீட்டுத்துறை மற்றும் வணிகங்கள் மீது சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் கவனமான திட்டமிடலின் தேவை இதன்போது வலியுறுத்தினர். இதனால் கட்டண முறையானது, செலவு மீட்பை மட்டுமல்லாமல், முன்னறிவிக்கக்கூடிய தன்மையையும் வழங்க வேண்டும் என்பதோடு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான உற்பத்திக்கு முதலீட்டை செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  இதேவேளை, மறுசீரமைப்புகள் மனிதாபிமான ரீதியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய வீட்டுத்துறையினரைப் பாதுகாப்பதற்கான இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாப்பது மற்றும் செயற்திறன் வருமானங்கள் இறுதிப் பயனாளர்களுக்கு நியாயமான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதி செய்வது என்பவற்றின் முக்கியத்துவத்தை கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினர். தரவுகளின் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் (PPAs) காணப்படும் இடைவெளிகள், முழுமையற்ற செலவு வகைப்படுத்தல்கள் மற்றும் பலவீனமான தகவல் கட்டமைப்புக்கள் தொடரிப்பிலும் கரிசனைகள் எழுப்பப்பட்டன. வலுவான நிர்வாகம் மற்றும் சுயாதீன ஒழுங்குமுறைபடுத்தல் இல்லாமல் ஒரு நவீன மற்றும் வினைத்திறனான கட்டண முறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியாது என கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.  கட்டண மறுசீரமைப்பை முற்றிலும் ஒரு தொழில்நுட்ப ரீதியான செயற்பாடாக கருதக்கூடாது என்றும் இது நிதி ரீதியான ஸ்திரத்தன்மை கொண்ட மின்சாரத் துறையை ஏற்படுத்துதல், 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு நிலைபேறான வகையில் மாறுவதை உறுதி செய்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழிற்துறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய கொள்கை ரீதியான நோக்கங்களில் அடிப்படையாக இருக்க வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
2025-09-12 2026 வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 7...
2025-09-12 பிலியந்தலை மத்திய கல்லூரி...
மேலும்

2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-11
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த  விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
2025-09-09 2025 செப்டம்பர் 09ஆந் திகதியின் சபை...
2025-08-22 2025 ஆகஸ்ட் 22ஆந் திகதியின் சபை...
2025-08-21 2025 ஆகஸ்ட் 21ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

அடிக்கடி வினவப்படுபவை

இவ் உள்ளடக்கம் இணையத்தளத்தில் தற்போதைக்கு கிடைக்கப் பெறாது

பாராளுமன்ற அலுவல்களின் ஒழுங்கு

பாராளுமன்ற அலுவலானது 22 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளுக்கமைய பின்வரும் ஒழுங்கில் நடாத்தப்படும்.

 

1.

புதிய உறுப்பினர் ஒருவரால் செய்யப்படும் உத்தியோகபூர்வ
சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம்இது கௌரவ சபாநாயகரினால் நடத்தி வைக்கப்படும்.

2.

ஜனாதிபதியின் செய்திகள்
ஜனாதிபதியிடமிருந்து வந்த செய்திகள் கௌரவ சபாநாயகரால் அல்லது பிரதிச் சபாநாயகரால் அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளரால் அல்லது தலைமைதாங்கும் உறுப்பினரால் வாசிக்கப்படும்.

3.

சபாநாயகரின் அறிவித்தல்கள்
சட்ட மூலங்கள் பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள், சட்ட மூலங்களின் உறுதிப்படுத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் மரணம், தவிசாளர் குழாமில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், குழுக்களின் நியமனம் போன்ற பாராளுமன்றத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்கள் பற்றிய அறிவித்தல்களும் கௌரவ சபாநாயகரால் மேற்கொள்ளப்படும்.

4.

பத்திரங்கள் சமர்ப்பித்தல்
கௌரவ சபாநாயகரால் அல்லது ஓர் அமைச்சரால் அல்லது ஒரு பிரதி அமைச்சரால் மட்டுமே பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட முடியும்.

5.

குழுக்களின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பாராளுமன்றக் குழுக்களின் அறிக்கைகளை அந்தந்தக் குழுக்களின் தவிசாளர் சமர்ப்பிப்பார். ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் அந்தந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் சமர்ப்பிக்கப்படலாம்.

6.

மனுக்கள்
பிரசைகள் தமது நிருவாக ரீதியான இடர்ப்பாடுகளுக்குப் பரிகாரம் தேட, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரூடாகப் பாராளுமன்றத்திற்கு மனுக்கள் சமர்ப்பிக்கலாம். அவ்வாறான மனுக்கள் பரிசீலனைக்காகப் பொது மனுக்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.

7.

கேள்விகள்
கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம அமைச்சரிடமோ அல்லது யாரேனும் ஓர் அமைச்சரிடமோ பொது விடயங்கள் தொடர்பாக குறித்த அமைச்சின் கீழ்வரும் விடயங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் வாய்மூல வினாக்களை முன்வைக்கலாம். உறுப்பினர் ஒருவர் நாளொன்றுக்கு மூன்று வாய்மூல வினாக்களை மட்டுமே கேட்கமுடியும். வினாவுக்கான நேரம் பி.ப. 01.00 முதல் பி.ப. 02.00 வரையாகும்.

8.

சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி கோரும் பிரேரணைகள்
தொடர்ச்சியாக மூன்று மாத காலத்திற்கு விடுப்பை வேண்டும் யாரேனும் ஓர் உறுப்பினர் அதற்கான சபையின் அனுமதியைப் பெறவேண்டும். அரசியலமைப்பின் உறுப்புரை 66(ஊ) இன் கீழ், சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதி கோரும் பிரேரணையொன்று குறித்த உறுப்பினரின் வேண்டுகோளின் பேரில் யாரேனும் ஓர் உறுப்பினரால் சபையில் பிரேரிக்கப்படலாம். இப்பிரேரணை அமைச்சர் ஒருவரால் சபையில் பிரேரிக்கப்படாதவிடத்து, வழிமொழியப்படல் வேண்டும்.

9.

அமைச்சு சம்பந்தமான கூற்றுக்கள்
பொது முக்கியத்துவம் மற்றும் கொள்கை தொடர்பான விடயங்கள் பற்றியும், தமக்குப் பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சு சம்பந்தமாக, சபையில் முன்வைக்கப்பட்ட தவறான தகவல் ஒன்றை சபையின் முன் திருத்துவதற்கும் அமைச்சு சம்பந்தமான கூற்றுக்கள் அமைச்சர்களால் விடுக்கப்படும். அமைச்சு சம்பந்தமான இக் கூற்றுக்களை மேற்கொள்ள கௌரவ சபாநாயகரின் முன் அனுமதி தேவை. கூற்றினை விடுக்கும் வேளையில் கேள்விகள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டா. ஆனால் அடுத்து வரும் ஒரு தினத்தில் இது பற்றிய விவாதமொன்றுக்கு அனுமதியளிக்கப்படலாம்..

10.

தனிப்பட்ட விளக்கங்கள்
சபையில், தனக்கெதிரான குற்றச்சாட்டொன்று கொண்டுவரப்படுகையில் அல்லது பாராளுமன்ற நிகழ்வு பத்திரிகையில் தவறான விதத்தில் அறிக்கை செய்யப்படுகையில், எவரேனும் ஓர் உறுப்பினர் தனிப்பட்ட விளக்கமொன்றை அளிக்க முடியும். தனிப்பட்ட விளக்கங்கள் பாதிக்கப்பட்ட உறுப்பினரால் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறான விளக்கங்கள் அளிக்கப்பட முன்னர், உறுப்பினர்கள் கௌரவ சபாநாயகரின் அனுமதியைப் பெறவும் வேண்டும்.

11.

சிறப்புரிமைக் கேள்விகள்
22ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் உறுப்பினர் ஒருவர் உரிய அறிவித்தலைக் கௌரவ சபாநாயகரிடம் அளித்ததன் பின்னர் சிறப்புரிமை விடயம் ஒன்றைச் சபையில் எழுப்பலாம். ஆயினும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குறித்த அவசர பிரேரணையொன்று மற்றெல்லா அலுவல்களையும் விட முன்னிலை வகிக்கும். சிறப்புரிமை விடயமொன்றை எழுப்புவதற்காக சபையின் நடைமுறைகள் எந்த ஒரு நேரத்திலும் குறுக்கீடு செய்யப்படலாம்.

12.

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான முன்னறிவித்தல் தேவைப்படாத பிரேரணைகள்
அமர்வு நேரங்களில் மாற்றம் செய்தல், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தல் மற்றும் சிறப்புரிமை விடயமொன்றைச் சிறப்புரிமைகள் குழுவுக்கு சமர்ப்பித்தல் போன்ற பிரேரணைகளுக்கு முன் அறிவித்தல் தேவையில்லை. அத்துடன் அவ்வாறான பிரேரணைகள் பாராளுமன்றச் சபைத் தலைவரால் அல்லது அரசாங்க முதற்கோலாசானால் அல்லது அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் பிரேரிக்கப்படவேண்டும்.

13.

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போதான முன்னறிவித்தல் தேவைப்படும் பிரேரணைகள்
பொதுவாக, பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது சமர்ப்பிக்கப்படும் சட்ட மூலங்களுக்கு அறிவித்தல் தேவை. அரசாங்கச் சட்ட மூலங்கள் தனியார் உறுப்பினர் சட்டமூலங்களுக்கு முன்னதாகச் சமர்ப்பிக்கப்படும்.

14.

அனுதாபப் பிரேரணைகள்
மரணமடையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து அனுதாபப் பிரேரணைகளை நிறைவேற்றும் பொருட்டுச் சபையினில் ஒரு நாளை ஒதுக்குவது பாராளுமன்ற நடைமுறையாகும். அனுதாபப் பிரேரணைகளுக்குக் குறித்த கால எல்லை எதுவும் கிடையாது.

15.

பொது அலுவல்கள்
அறிவித்தல் வழங்கப்பட்டதும் குறித்த ஒரு தினத்திற்கான ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதுமான அனைத்து விடயங்களும் “பொது அலுவல்களில்” அடங்கும். சட்ட மூலங்கள், பிரேரணைகள், ஒழுங்கு விதிகள், குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தனியார் உறுப்பினர் சட்டமூலங்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.

பாராளுமன்ற அமர்வு நாட்களும் நேரங்களும்

பாராளுமன்ற அமர்வு நாட்கள்

 

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 8(1) இல் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக, பாராளுமன்றம் வேறுவிதமாகத் தீர்மானித்தாலன்றி, ஒரு மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்துவரும் வாரத்திலும் ஒன்றுவிட்ட அடுத்த வாரத்திலுமாக இரு வாரங்களிலும் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும். அத்தகைய முதலாவது மூன்றாவது வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும்.

 

ஆயினும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 75 இன் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றம் இருபத்தாறு நாட்கள் கூட வேண்டும். எனினும், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அங்கீகாரத்திற்கு அமைய இவ்வொதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்.

 

பாராளுமன்ற அமர்வு நேரங்கள்

 

பாராளுமன்றத்தில் 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, 2023 ஆகஸ்ட் 22ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வு நேரங்கள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மு.ப. 9.30 முதல் பி.ப. 12.30 வரையும் பி.ப. 1.00 முதல் 5.30 வரையுமாகும்.

மேற்சொன்ன வண்ணம் பாராளுமன்றம் பின்வருமாறு கூடுகின்றது:-

(செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்)

மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 முதல் பி.ப. 12.30 சபையின் பிரதான அலுவல்கள்
பி.ப. 1.00 முதல் பி.ப. 5.00
பி.ப. 5.00 முதல் பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (2 வினாக்கள்)/ ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 முதல் பி.ப. 01.00)

 

ஒவ்வொரு மாதத்தினதும் முதல் அமர்வு வாரத்தில் புதன்கிழமை நாட்களில், பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மணித்தியாலத்தில் அரை மணித்தியாலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன வண்ணம், வினா மணித்தியாலம் பின்வருமாறு அமைகிறது:-

 

புதன்கிழமைகளில் 

மு.ப. 9.30 முதல் மு.ப. 10.00 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (4 வினாக்கள்)
மு.ப. 10.00 முதல் மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்)

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom