இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு

2025-09-18
1
இலங்கையின் தற்போதைய மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், நிதி ஸ்திரத்தன்மை, நிலைபேறான தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்பவற்றுடன் இணங்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டண முறை குறித்து அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் செலவு மீட்பு மற்றும் செலவுப் பிரதிபலிப்பு ஆகிய இரண்டும் வலுவான மற்றும் வெளிப்படையான மின்சாரத் துறைக்கு இன்றியமையாத கொள்கைகள் என கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டினர். IMF - நீடிக்கப்பட்ட நிதி வசதி (EEF) திட்டத்துடன் இணைந்தாக மின்சாரக் கட்டண முறையை மறுபரிசீலனை செய்வதற்காக IMF பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. 2025 நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு முன்நிபந்தனை நடவடிக்கையாக இது பரிந்துரைக்கப்பட்டதால் திருமதி டெல்ஃபைன் பிரடி (FAD இன் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்) தலைமையிலான குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஏனைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.  இந்தத் தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் கௌரவத் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கௌரவ தலைவர் கபீர் ஹஷீம், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பாலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, திலின சமரகோன், திலித் ஜயவீர, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.  செலவு மீட்பானது சம்பந்தப்பட்ட துறை அதன் மொத்தச் செலவினங்களை ஈடுகட்டுவதை உறுதிசெவதன் மூலம் வினைத்திறனின்மைகளைத் தடுத்து, நவீனமயமாக்கலுக்குத் தேவையான முதலீடு மற்றும் கடன் ஈர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும் என கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டது. இதேவேளை, செலவுப் பிரதிபலிப்பு என்பது நுகர்வோர் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உண்மையான செலவின் அடிப்படையில் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, நியாயமற்ற இடை-மானியங்களைக் குறைப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், செலவுகளை மீட்டெடுக்காவிட்டால், வினைத்திறன் இன்மைகள் பெருகி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகள் இல்லாமல் போகும் என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கு தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இதனை அடைவதற்கு இலங்கை சரியான உட்கட்டமைப்பு, நிதி மற்றும் ஊக்குவிப்புக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தினர். சூரிய சக்தி, நீர்மின்சக்தி மற்றும் காற்றாலை வலுசக்தி என்பவற்றை விரிவுபடுத்துவதுடன், களஞ்சிய மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைந்த முதலீடுகள் அத்தியாவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. அனல் மின்சாரம் தொடர்ந்து ஒரு பங்கை வகித்தாலும், அது மிகவும் விலையுயர்ந்தது என்றும் உலகளாவிய விலை அதிர்ச்சிகளுக்கு உள்ளாகின்றமையால் மிகவும் நிலையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உயர்ந்தளவிலான போட்டித்தன்மை வாய்ந்தது என்றும் ஆனால் அதற்கு முன்கூட்டிய முதலீட்டுத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. நிலையற்ற உற்பத்திச் செலவுகள், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது என இங்கு எச்சரிக்கப்பட்டது. திடீர் செலவு அதிகரிப்புகள் வீட்டுத்துறை மற்றும் வணிகங்கள் மீது சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் கவனமான திட்டமிடலின் தேவை இதன்போது வலியுறுத்தினர். இதனால் கட்டண முறையானது, செலவு மீட்பை மட்டுமல்லாமல், முன்னறிவிக்கக்கூடிய தன்மையையும் வழங்க வேண்டும் என்பதோடு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான உற்பத்திக்கு முதலீட்டை செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  இதேவேளை, மறுசீரமைப்புகள் மனிதாபிமான ரீதியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய வீட்டுத்துறையினரைப் பாதுகாப்பதற்கான இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாப்பது மற்றும் செயற்திறன் வருமானங்கள் இறுதிப் பயனாளர்களுக்கு நியாயமான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதி செய்வது என்பவற்றின் முக்கியத்துவத்தை கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினர். தரவுகளின் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் (PPAs) காணப்படும் இடைவெளிகள், முழுமையற்ற செலவு வகைப்படுத்தல்கள் மற்றும் பலவீனமான தகவல் கட்டமைப்புக்கள் தொடரிப்பிலும் கரிசனைகள் எழுப்பப்பட்டன. வலுவான நிர்வாகம் மற்றும் சுயாதீன ஒழுங்குமுறைபடுத்தல் இல்லாமல் ஒரு நவீன மற்றும் வினைத்திறனான கட்டண முறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியாது என கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.  கட்டண மறுசீரமைப்பை முற்றிலும் ஒரு தொழில்நுட்ப ரீதியான செயற்பாடாக கருதக்கூடாது என்றும் இது நிதி ரீதியான ஸ்திரத்தன்மை கொண்ட மின்சாரத் துறையை ஏற்படுத்துதல், 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு நிலைபேறான வகையில் மாறுவதை உறுதி செய்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழிற்துறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய கொள்கை ரீதியான நோக்கங்களில் அடிப்படையாக இருக்க வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
2025-09-12 2026 வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 7...
2025-09-12 பிலியந்தலை மத்திய கல்லூரி...
மேலும்

2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-11
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த  விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
2025-09-09 2025 செப்டம்பர் 09ஆந் திகதியின் சபை...
2025-08-22 2025 ஆகஸ்ட் 22ஆந் திகதியின் சபை...
2025-08-21 2025 ஆகஸ்ட் 21ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

தத்துவங்களும் சிறப்புரிமைகளும் சட்டம்

பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் சிறப்புரிமைகளையும், விடுபாட்டுரிமைகளையும், தத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்கும், வரைவு படுத்துவதற்கும்; பாராளுமன்றத்தில் பேச்சு, விவாதம் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றுக்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கப் பெறுவதற்கும்; பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல்களுக்கான தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும், பாராளுமன்ற அறிக்கைகள், பத்திரங்கள், நிகழ்சிக்குறிப்புகள், தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றை ‌வெளியிடுவதில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்குமானதொரு சட்டம்.

 

தரையிறக்கம்

பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்

பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்

பாராளுமன்றத்தினதும் அதன் உறுப்பினர்களதும் சிறப்புரிமைகளையும், விடுபாட்டுரிமைகளையும், தத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்கும், வரைவு படுத்துவதற்கும்; பாராளுமன்றத்தில் பேச்சு, விவாதம் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றுக்கான சுதந்திரத்தைப் பாதுகாக்கப் பெறுவதற்கும்; பாராளுமன்றச் சிறப்புரிமை மீறல்களுக்கான தண்டனைக்கு ஏற்பாடு செய்வதற்கும், பாராளுமன்ற அறிக்கைகள், பத்திரங்கள், நிகழ்சிக்குறிப்புகள், தீர்மானங்கள் அல்லது நடவடிக்கைகள் என்பவற்றை ‌வெளியிடுவதில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்குமானதொரு சட்டம்.

 

தரையிறக்கம்

Parliament (Powers and Privileges Act)

 

 

மேலே செல்ல

சர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சபைகள்

பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கம்

பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கம் (CPA) பேரரசுப் பாராளுமன்றச் சங்கமாக 1911இல் நிறுவப்பட்டது. அவுஸ்திரேலியா, கனடா, நியூபவுண்லாந்து, நியூசீலாந்து, தென்னாபிரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியன அதன் ஆரம்ப கால உறுப்புக் கிளைகளாகும். பொதுநலவாய அமைப்பு வளர்ச்சி பெற்றதோடு, பொ.பா.ச. அதன் தற்போதைய பெயரை 1948 இல் பெற்றது.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்குப் பங்களிப்புச் செய்யும் பொதுநலவாய நாடுகளிலுள்ள சட்டவாக்கச் சபைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கிளைகளை உறுப்பினர்களாகக் கொண்டு இச்சபை அமைந்துள்ளது. தற்போது இச்சங்கத்தின் தேசிய, மாநில, மாகாண மற்றும் பிராந்திய பாராளுமன்றங்களின் உறுப்பினர் தொகை 164 ஆக உள்ளது.

ரிந்துணர்வையும் ஊக்குவிப்பதும் பொதுநலவாய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பையும் கலந்துரையாடலையும் மேம்படுத்துவதும் பொதுநலவாய பாராளுமன்றச் சங்கத்தின் பணியாகும். பின்வரும் செயற்பாடுகளின் வாயிலாக பொ.பா.ச. அதன் பணியைப் பூர்த்தி செய்கின்றது.

 

மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், பயிற்சி நிகழ்ச்சிகள்

 

வெளியீடுகள்

 

தகவல் வழங்குதல்

 

பாராளுமன்ற விஜயங்கள்

 

பொதுநலவாயப் பாராளுமன்ற மாநாடுகள்

இற்றை வரை 53 பொதுநலவாயப் பாராளுமன்ற மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அவற்றுள் இரண்டு 1974ஆம் ஆண்டிலும், 1995ஆம் ஆண்டிலும் இலங்கையில் நடத்தப்பட்டன. பொதுநலவாயப் பாராளுமன்றச் சங்கத்தில் (இலங்கைக் கிளை) உறுப்புரிமை வேண்டி விண்ணப்பிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உரித்துடையவர்களாவர்.


அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம்

பாராளுமன்ற உறுப்பினர்களும் சமாதான விரும்பிகளுமான வில்லியம் றெண்டோல் கிறீமர் (ஐஇ.), ஃபிறடறிக் பெஸ்ஸி (பிரான்ஸ்) ஆகிய இருவரின் முன்முயற்சியின் பேரில் 1889இல் அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அதுவே தேசியப் பாராளுமன்றங்களின் உலக அமைப்பாகும். தற்போது இவ்வொன்றியம் 140 நாடுகளின் தேசியப் பாராளுமன்றங்களை உறுப்பினர்களாகக் கொண்டமைந்துள்ளது.

அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் முக்கிய குறிக்கோளாவது, அரசியல் கலந்துரையாடல்களினூடாகச் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பேணிப் போற்றுதலும் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மதித்தலை ஊக்குவித்தலும் அந்தந்த நாடுகளின் பயனுறுதிமிக்க சட்டவாக்க நிறுவனங்களின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தலுமாகும்.



அனைத்துப் பாராளுமன்ற மாநாடுகள்
அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியம் சர்வதேசப் பிரச்சினைகளின் மீதான தனது கருத்துக்களை வெளியிடுவதற்கும் பரிந்துரைகளை மேற்கொள்வதற்குமான பிரதான அமைப்பு இதுவேயாகும். 2008ஆம் ஆண்டு வரை 118 அ.பா.ஒ. மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தில் (இலங்கைக் கிளை) உறுப்பினர்களாவதற்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தகுதியுடையவர்களாவர்.


சார்க் பாராளுமன்றச் சங்கம்

சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு 1988 ஏப்பிரலில் கௌத்தமாலாவில் நடைபெற்ற அ.பா.ஒ. மாநாட்டில் முதலில் மேற்கொள்ளப்பட்டது. அதன் முதலாவது கூட்டம் டாக்காவில் 1994 ஜனவரி 28 முதல் 29 வரை நடைபெற்றது. அங்குதான் சார்க் பாராளுமன்றச் சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் உறுப்பு நாடுகள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகியவற்றை உள்ளடக்கும்.

பாராளுமன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள், தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கான மன்றமொன்றை அறிமுகஞ் செய்வதன் மூலம் சார்க் நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையேயும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையேயும் தொடர்பையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் முதன்மையான இலக்காகும். சார்க் நாடுகளின் மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் நட்புறவையும் ஏற்படுத்துவதும் சர்வதேச மன்றங்களில் பொதுவான நலன்களுக்கான விடயங்களில் ஒத்துழைக்கக்கூடியதாக இந்நாடுகளிடையே பிணைப்பை ஸ்திரப்படுத்துவதும் இதன் இரண்டாவது குறிக்கோளாகும். சார்க்கின் பணிகளுக்கு ஆதரவைத் திரட்டிக் கொள்ளுமுகமாகத் தெற்காசியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் தனது கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய அறிவையும் இச்சங்கம் மேம்படுத்துகிறது.

சார்க் பாராளுமன்றச் சங்கத்தில் (இலங்கைக் கிளை) உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்கச் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் உரித்துடையவர்களாவர். மேலும் தகவல்களுக்கும் உறுப்புரிமை விண்ணப்பப் படிவங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

மேலும் தகவல்களுக்கும் உறுப்புரிமை விண்ணப்பப் படிவங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

திரு. எஸ். ஏ. உபாலி குமாரசிங்க,
பாராளுமன்றப் பிரதான ஒழுங்கு மரபு உத்தியோகத்தர்,
வெளிநாட்டுறவுகள் மற்றும் ஒழுங்கு மரபு அலுவலகம்
4ஆம் மாடி, பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.
தொலைபேசி: +94 11 2777277 / +94 11 2777288
தொலைநகல்: +94 11 2777501/275

மேலே செல்ல

அடிக்கடி வினவப்படுபவை

இவ் உள்ளடக்கம் இணையத்தளத்தில் தற்போதைக்கு கிடைக்கப் பெறாது

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom