விதிகளின் முக்கியத்துவம் என்ன?

பாராளுமன்றத்தின் முறையான செயற்பாடுகளுக்கு வகைசெய்யும் முகமாக விதிகளும் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டுப் பின்பற்றப்படுகின்றன.இவ்விதிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சபையில் விவாதங்களின் தரத்தை உயர்த்த முடியும். சட்டங்களை நிறைவேற்றுவதிலும்,வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதிலும் ஏனைய விடயங்களிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற விவாதங்களில் பங்குபற்ற வேண்டியிருக்கின்றது. பாராளுமன்ற முறைமையில், சபையில் எல்லா நோக்குகளும் கருத்துக்களும் எண்ணங்களும் கருத்துப் படிவங்களும் ஓர் ஒழுங்குக் கிரமத்தில் எழுப்பப்படுகின்றன. அதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய முடிவுகள் எட்டப்படுகின்றன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-08-29 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு