இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்திற்கு மு.ப 9.00 மணிக்கு வருகைதருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு

திகதி : 2024-11-19

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மு.ப 9.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிசாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன் வாக்கழைப்பு மணியோசை அடிக்கும்வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவி அல்லது துணைவரோடு வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும், மற்ற எல்லா உறுப்பினர்களும் உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom