இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-06-06

கௌரவ நீல் ரூபசிங்க பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சட்ட மூலங்களின் சமர்ப்பணம்

"குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு"

குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உரிமைகளையும் உரித்துடைமைகளையும் எடுத்துக் கூறுவதற்கும் அத்தகைய உரிமைகளையும் உரித்துடைமைகளையும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புத் தொடர்பாகத்தோதான சர்வதேச மரபுகளுக்கும் மிகச் சிறந்த நடைமுறைகளுக்குப் பயன்கொடுப்பதற்கும், குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையையும், இலங்கைப் பொலிசுத் திணைக்களத்தின் குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புப் பிரிவையும் தாபிப்பதற்கும் குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உதவி மற்றும் பாதுகாப்பு நிதியத்தைத் தாபிப்பதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை பாராளுமன்ற சபை முதல்வர் நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் சார்பில் பிரேரித்தார்.


பிரேரணை முன்னறிவித்தல்கள்

தெரிவுக்குழு

121 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் நடப்புக் கூட்டதொடரின்போது தெரிவுக்குழுவில் சேவையாற்றும் பொருட்டு சபாநாயகரின் தலைமையில் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களது பிதிநிதிகளான பாராளுமன்றத்தினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் இருபத்திமூன்று (23) உறுப்பினர்களை கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பாராளுன்றத் தெரிகுழு

2008, திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை காலநீடிப்பு செய்யப்படல் வேண்டும் என பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்த பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.

வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துக்களைப் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்றத் தெரிகுழு

2008, திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை காலநீடிப்பு செய்யப்படல் வேண்டும் என பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்த பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.

மனிதரால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகளை விசாரணை செய்வதற்கும் அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்குமான பாராளுமன்றத் தெரிகுழு

2008, திசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை காலநீடிப்பு செய்யப்படல் வேண்டும் என பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்த பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


சபையின் இன்றைய தினத்திற்கான பிரதான அலுவல்கள்

"1979 ஆம் ஆண்டின் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை"

பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.


அதன் பின்னர், 2008, ஜூன் 17ஆம் திகதி 0930 மணி வரை பாராளுமன்றம் 1525 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom