திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை ஆகியவற்றை பாராளுமன்றம் அங்கீகரித்தது |
திகதி : | 2018-03-07 |
திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “நடத்தைக் கோவை” ஆகியவற்றை இலங்கை பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது. அதற்கிணங்க, 2017 நவம்பர் 07 மற்றும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் குழுவின் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டதுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டன. திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைவுகள் மற்றும் நடத்தைக் கோவை என்பன பாராளுமன்ற உறுப்பினர்களின் பரசீலனைக்காக கடந்த ஆண்டு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
ஏனைய திருத்தங்களுடன் உயர் பதவிகள் பற்றிய குழு முதலியவற்றுக்கான ஏற்பாடுகள் கூட்டிணைக்கப்பட்டு, 25 வருடங்களுக்கு முன்னர் 1993 பெப்ரவரி 26 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் இறுதியாக திருத்தப்பட்டது. 2015 இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அண்ணளவாக இரு வருட கால நீண்ட கால செயன்முறையின் வெளிப்பாடே நிலையியற் கட்டளைகளை திருத்துதல் மற்றும் நடத்தைக் கோவையினை வரைதலாகும். கௌரவ சபாநாயகர் அவர்களின் தலைமையிலான நிலையியற் கட்டளைகள் குழுவானது, இக்கால இடைவெளியில் பன்னிரெண்டு முறை சந்தித்துள்ளதுடன், இது ஆறாம் மற்றும் ஏழாம் பாராளுமன்றங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இத்துறையுடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆரறிவாளர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோரின் பரிந்துரைகளை உள்வாங்கி நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, விசேட விடயங்களை கவனிப்பதற்காக மற்றும் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்காக நான்கு உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
சமகால சட்டவாக்க தேவைகள் மற்றும் சபை மற்றும் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக நிலையியற் கட்டளைகளை திருத்துவதற்கான தேவை சில காலங்களாக உணரப்பட்டது. நிலையியற் கட்டளைகளில் உள்வாங்கப்பட்டுள்ள சில புதிய திருத்தங்கள் பின்வருமாறு;
- இலத்திரனியல் வழிமுறைகளினூடான சபை மற்றும் குழுக்களின் நேரடி ஒலிபரப்புக்கான ஏற்பாடுகள்
- இலத்திரனியல் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள்
- பாராளுமன்ற அமர்வு நேரங்கள்
- ஒத்திவைப்பு வினாக்கள்
- பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
- துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அமைச்சு ஆலோசனைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, பின்வரிரசை குழு, போன்றவற்றை கூட்டிணைத்தல்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் நோக்கமானது பாராளுமன்றத்துக்கு, அவர்களின் தேர்தல் தொகுதி மற்றும் பொதுமக்களுக்கான தமது பொறுப்புடைமைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு அவர்கள் தமது தத்துவங்களையும் பணிகளையும் மற்றும் கடமைகளையும் தங்களால் பிரயோகித்தல் புரிதல் மற்றும் நிறைவேற்றுவதல் என்பவற்றுக்கு உதவுவதற்காகும். ஒவ்வொரு உறுப்பினரும் நடத்தை கோட்பாட்டை நிலைநிறுத்துவதாகவும், உறுப்பினர் அல்லது எந்தவொரு கோரிக்கையின் மீறலுக்கும் எந்தவொரு குற்றமற்ற நடத்தை பற்றியும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை பற்றிய குழுவிற்கு பரிந்துரைக்கப்படலாம், இதையொட்டி அந்த விவகாரத்தை விசாரித்து, ஒப்புதலையும் அளிக்கலாம்.
சபாநாயகரின் அறிவித்தலின் பின்னரே திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகள் மற்றும் நடத்தைக் கோவை என்பன செயற்பாட்டிற்கு வரவுள்ளன.
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை (2017-11-07 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை (2018-03-07 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைவு (2017-06-07 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு (2017-08-09 அன்று சமர்ப்பிக்கப்பட்டது)
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






