2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விஷேட குழு
| |||||||||||
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம் - 3 ஆம் கூட்டத் தொடர்)
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து, ஆட்களுக்கு சேதமேற்பட்டு, சொத்துக்களும் அழிவடைந்ததன் காரணமாக;
(அ) அத்தகைய தாக்குதல்களுக்கு முன்னர் அது பற்றிய புலனாய்வுத் தகவல்கள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு கிடைத்திருந்ததா என்பதையும்;
(ஆ) அத்தகைய தாக்குதல்களை தடுப்பதற்கு மற்றும் / அல்லது அவற்றைக் குறைத்துக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதியளவில் நடவடிக்கை மேற்கொண்டார்களா என்பதையும்;
(இ) அத்தகைய தாக்குதல்களின் பாதிப்புக்களைத் தடுப்பதற்கு மற்றும்/அல்லது குறைப்பதற்கு முடியாமல் போனமைக்குக் காரணமாக அமைந்த அரச பொறிமுறையின் குறைபாடுகள் காணப்பட்டனவா என்பதையும்;
(ஈ) அத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பங்களிப்புச் செய்த வேறு விடயங்களையும்;
(உ) பயங்கரவாதிகளுக்கு அனுசரணையளித்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது ஆளுநருக்கோ அல்லது நபருக்கோ எதிராகவுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா என்பதையும் ;
(ஊ)எதிர்காலத்தில் அத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக மேற்கொாள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை என்பதையும்; மற்றும்
(எ) மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய அல்லது இடைநேர்விளைவான வேறு விடயங்கள் தொடர்பாகவும்;
ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுமாக.
2. (அ) குழு மற்றும் அதன் தவிசாளர் சபாநாயகரால் பெயர் குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்;
(ஆ) 101 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை பன்னிரண்டிற்கு (12) மேற்படாதவர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
3. குழுவானது,
(அ) அதன் கூட்ட நடப்பெண்ணை நிர்ணயிப்பதற்கும்;
(ஆ) எவரேனும் ஆட்கள், ஏதேனும் பத்திரங்கள் அல்லது ஏதேனும் பதிவேடுகளை வரவழைப்பதற்கும், பாராளுமன்றத்தின் முன் அல்லது குறித்த குழுவின் முன் தோன்றி அத்தகைய ஆளின் உடைமையில் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏதேனும் பத்திரம், புத்தகம், பதிவேடு அல்லது ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு எந்தவோர் ஆளுக்கும் பணிப்புரை விடுப்பதற்கும்;
(இ) குழுவின் தவிசாளர் அல்லது உரிய நோக்கத்திற்காக குறித்துரைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் சாட்சிகளை வாய்மூலம் விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கும் அல்லது வேறு விதத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்கும் சத்தியம் அல்லது உறுதியுரையின் மீது சாட்சிகளை விசாரிப்பதற்கும்;
(ஈ) பாராளுமன்றத்துக்கு வெளியே நாட்டின் ஏதேனும் பகுதிகளில் கூட்டங்களை நடத்துவதற்கும் ;
(உ) குழுவுக்கு உதவி வழங்குவதற்காக தொடர்புடைய துறைகளில் சிறப்பறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்; மற்றும்
(ஊ) பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒத்திவைப்பினால் தடைபெறாது காலத்திற்குக் காலம் இடைக்கால அறிக்கைகளைத் தயாரிப்பதற்கும் கூடுவதற்கும்;
அதிகாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.
4. குழு அதன் முதலாவது அமர்வுத் திகதியிலிருந்து மூன்று (03) மாத காலத்திற்குள் அல்லது பாராளுமன்றத்தினால் வழங்கப்படக்கூடிய அத்தகைய வேறு அல்லது மேலதிக காலப்பகுதிக்குள் அதன் அறிக்கையைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










