புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி |
திகதி : | 2024-04-26 |
புதிய தூதுவர், அமைச்சின் செயலாளர் மற்றும் இரு நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, இத்தாலி குடியரசின் புதிய இலங்கைத் தூதுவராக எஸ்.ஏ.ரொட்றிகோ அவர்களின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்தது.
அத்துடன், நீர் வளங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஏ.சி.எம். நஃபீல் அவர்களின் நியமனத்துக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் புதிய தலைவராக டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அவர்களின் நியமனத்துக்கும், இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் தலைவராக என்.கே.எஸ்.ஜயசேகர அவர்களின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் அமைச்சர்களான கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன, கெளரவ விதுர விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






