இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

chamber-front

நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க

chamber-front

தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

Parliament

2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

அறிக்கை

  • நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

    அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க

  • தேசபந்து தென்னக்கோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

    ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று (ஆக. 05) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் வாசிக்க

  • 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 5 உடன் படிக்கப்படும் பிரிவு 3(d) மற்றும் 3(e) இன் கீழ், அவரது பதவியின் தவறான நடத்தை மற்றும் மொத்த அதிகார துஷ்பிரயோகத்திற்காக, பொலிஸ் மா அதிபர் திரு. டி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக, 2025 ஏப்ரல் 08 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை

    அறிக்கை


இலங்கையின் மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், செலவு பிரதிபலிப்பு, செலவு மீட்பு, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் மலிவுத்தன்மை என்பவற்றுக்கு இடையே சமநிலையை பேண வேண்டும் - IMF திறன் விருத்தி தூதுக்குழுவினருடனான கலந்துரையாடலில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பு

2025-09-18
1
இலங்கையின் தற்போதைய மின்சாரத் துறை மறுசீரமைப்புக்கள், நிதி ஸ்திரத்தன்மை, நிலைபேறான தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்பவற்றுடன் இணங்க வேண்டியதன் அவசரத் தேவையை எடுத்துக்காட்டும் வகையில் கட்டண முறை குறித்து அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் செலவு மீட்பு மற்றும் செலவுப் பிரதிபலிப்பு ஆகிய இரண்டும் வலுவான மற்றும் வெளிப்படையான மின்சாரத் துறைக்கு இன்றியமையாத கொள்கைகள் என கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் சுட்டிக்காட்டினர். IMF - நீடிக்கப்பட்ட நிதி வசதி (EEF) திட்டத்துடன் இணைந்தாக மின்சாரக் கட்டண முறையை மறுபரிசீலனை செய்வதற்காக IMF பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. 2025 நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டிய ஒரு முன்நிபந்தனை நடவடிக்கையாக இது பரிந்துரைக்கப்பட்டதால் திருமதி டெல்ஃபைன் பிரடி (FAD இன் சிரேஷ்ட பொருளாதார நிபுணர்) தலைமையிலான குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, ஏனைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் இந்த ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டது.  இந்தத் தொழில்நுட்ப ரீதியான கலந்துரையாடல் 2025 செப்டம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்க நிதி பற்றிய குழுவின் கௌரவத் தலைவர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கௌரவ தலைவர் கபீர் ஹஷீம், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, நிமல் பாலிஹேன, (சட்டத்தரணி) சித்திரால் பெர்னாண்டோ, (சட்டத்தரணி) அஜித் பி. பெரேரா, திலின சமரகோன், திலித் ஜயவீர, சந்திம ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. வலுசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.  செலவு மீட்பானது சம்பந்தப்பட்ட துறை அதன் மொத்தச் செலவினங்களை ஈடுகட்டுவதை உறுதிசெவதன் மூலம் வினைத்திறனின்மைகளைத் தடுத்து, நவீனமயமாக்கலுக்குத் தேவையான முதலீடு மற்றும் கடன் ஈர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதாகும் என கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டது. இதேவேளை, செலவுப் பிரதிபலிப்பு என்பது நுகர்வோர் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உண்மையான செலவின் அடிப்படையில் பணம் செலுத்துவதை உறுதிசெய்து, நியாயமற்ற இடை-மானியங்களைக் குறைப்பதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், செலவுகளை மீட்டெடுக்காவிட்டால், வினைத்திறன் இன்மைகள் பெருகி புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வழிகள் இல்லாமல் போகும் என இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கு தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டதுடன், இதனை அடைவதற்கு இலங்கை சரியான உட்கட்டமைப்பு, நிதி மற்றும் ஊக்குவிப்புக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தினர். சூரிய சக்தி, நீர்மின்சக்தி மற்றும் காற்றாலை வலுசக்தி என்பவற்றை விரிவுபடுத்துவதுடன், களஞ்சிய மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் இணைந்த முதலீடுகள் அத்தியாவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டது. அனல் மின்சாரம் தொடர்ந்து ஒரு பங்கை வகித்தாலும், அது மிகவும் விலையுயர்ந்தது என்றும் உலகளாவிய விலை அதிர்ச்சிகளுக்கு உள்ளாகின்றமையால் மிகவும் நிலையற்றது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உயர்ந்தளவிலான போட்டித்தன்மை வாய்ந்தது என்றும் ஆனால் அதற்கு முன்கூட்டிய முதலீட்டுத் தேவை காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. நிலையற்ற உற்பத்திச் செலவுகள், நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நுகர்வோருக்கு அபாயங்களை ஏற்படுத்துகிறது என இங்கு எச்சரிக்கப்பட்டது. திடீர் செலவு அதிகரிப்புகள் வீட்டுத்துறை மற்றும் வணிகங்கள் மீது சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு துல்லியமான முன்னறிவிப்பு மற்றும் கவனமான திட்டமிடலின் தேவை இதன்போது வலியுறுத்தினர். இதனால் கட்டண முறையானது, செலவு மீட்பை மட்டுமல்லாமல், முன்னறிவிக்கக்கூடிய தன்மையையும் வழங்க வேண்டும் என்பதோடு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான உற்பத்திக்கு முதலீட்டை செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  இதேவேளை, மறுசீரமைப்புகள் மனிதாபிமான ரீதியாக செயற்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, பாதிக்கப்படக்கூடிய வீட்டுத்துறையினரைப் பாதுகாப்பதற்கான இலக்கு வைக்கப்பட்ட மானியங்கள், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் தொழிலாளர்களைப் பாதுகாப்பது மற்றும் செயற்திறன் வருமானங்கள் இறுதிப் பயனாளர்களுக்கு நியாயமான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதி செய்வது என்பவற்றின் முக்கியத்துவத்தை கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டினர். தரவுகளின் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களில் (PPAs) காணப்படும் இடைவெளிகள், முழுமையற்ற செலவு வகைப்படுத்தல்கள் மற்றும் பலவீனமான தகவல் கட்டமைப்புக்கள் தொடரிப்பிலும் கரிசனைகள் எழுப்பப்பட்டன. வலுவான நிர்வாகம் மற்றும் சுயாதீன ஒழுங்குமுறைபடுத்தல் இல்லாமல் ஒரு நவீன மற்றும் வினைத்திறனான கட்டண முறையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்த முடியாது என கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.  கட்டண மறுசீரமைப்பை முற்றிலும் ஒரு தொழில்நுட்ப ரீதியான செயற்பாடாக கருதக்கூடாது என்றும் இது நிதி ரீதியான ஸ்திரத்தன்மை கொண்ட மின்சாரத் துறையை ஏற்படுத்துதல், 2030 ஆம் ஆண்டுக்குள் 70% எனும் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு நிலைபேறான வகையில் மாறுவதை உறுதி செய்தல், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழிற்துறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல் ஆகிய கொள்கை ரீதியான நோக்கங்களில் அடிப்படையாக இருக்க வேண்டும் என இதன்போது இணக்கம் காணப்பட்டது.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-18 இலங்கையின் மின்சாரத் துறை...
2025-09-17 பாராளுமன்றம் செப்டெம்பர் 23 முதல்...
2025-09-17 கரந்தெனிய மத்திய மகா வித்தியாலய...
2025-09-12 2026 வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 7...
2025-09-12 பிலியந்தலை மத்திய கல்லூரி...
மேலும்

2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2025-09-11
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் 1 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்2 : இணைந்த  விசேட பொதுக் கூட்டம்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல் இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும்;...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2025-09-11 2025 செப்டம்பர் 11ஆந் திகதியின் சபை...
2025-09-10 2025 செப்டம்பர் 10ஆந் திகதியின் சபை...
2025-09-09 2025 செப்டம்பர் 09ஆந் திகதியின் சபை...
2025-08-22 2025 ஆகஸ்ட் 22ஆந் திகதியின் சபை...
2025-08-21 2025 ஆகஸ்ட் 21ஆந் திகதியின் சபை...
மேலும்

செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள்

2025-09-12
2025, செப்டம்பர் 11 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:-  
மேலும் வாசிக்க

அமர்வு வார
1வது நாள்
தலைப்பு
2025-09-23 செப்டம்பர் இரண்டாம் அமர்வு...
2025-09-09 செப்டம்பர் முதலாம் அமர்வு...
2025-08-19 ஆகஸ்ட் இரண்டாம் அமர்வு...
2025-08-05 ஆகஸ்ட் முதலாம் அமர்வு வாரத்திற்கான...
2025-07-22 ஜூலை இரண்டாம் அமர்வு வாரத்திற்கான...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்)

2021-07-16
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2021-07-16 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை...
2021-07-02 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-06-21 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜுன்...
2021-05-12 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மே மாத...
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
மேலும்
2025.09.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை
2025.08.19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

தற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை அதன் மூல வடிவத்தில் பதிவிறக்கம் செய்யவும்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை

பதினேழாவது திருத்தம் வரையான திருத்தங்கள்

1ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது – 1978/11/20

சில வழக்குகள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட நியாயாதிக்கம் உயர் நீதிமன்றத்தினால் பியோகிக்கப்படும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அல்ல எனவும் ஏற்பாடு செய்வதற்காக உறுப்புரை 140இற்கான திருத்தம்.


2ஆம் திருத்தம் - சான்றுப்படுத்தப்பட்டது – 1979/02/26

பாராளுமன்ற உறுப்பினரர்களின் பதவி விலகல், வெளியேற்றம் அல்லது வேறுவிதமான பதவி துறப்புகள் தொடர்பான நடவடிக்கைமுறைகள் பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும் உறுப்புரை 161இன் பந்தி (ஈ)இல் உபபிரிவு (ii)ஐ சேர்த்தல்.


3ஆம் திருத்தம் - சான்றுப்படுத்தப்பட்டது – 1982/08/27


தனது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு வருடங்கள் முடிவடைந்ததன் பின்னர் மேலும் ஒரு காலப்பகுதிக்கு பதவி வகிப்பதற்கு ஆணை ஒன்றை வழங்குமாறு மக்களைக் கோரும் தனது நோக்கத்தை எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி பிரகடனப்படுத்துவதற்கு வகை செய்வதறகாக உறுப்புரை 31இன் பந்தி (4)ஐ நீக்கி பந்தி (3அ)வை உட்புகுத்துதல்.

தனது பதவிக்காலம் ஆரம்பித்து இரண்டு வார காலத்தினுள் கடமையைப் பொறுப்பேற்பதற்கு ஜனாதிபதி வேண்டுமென்றே தவறினால், ஜனாதிபதிப் பதவி வறிதாதல் வேண்டும் என ஏற்பாடு செய்யும் உறுப்புரை 38இன் திருத்தம்.

ஜனாதிபதிப் பதவியை வகித்தல் பற்றிய உறுப்புரை 160இன் திருத்தம்.


4ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1982 /12/23

முதலாவது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலுமொரு ஆறு வருடங்களுக்கு, அதாவது, 1989 ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை நீடிப்பதற்காக உறுப்புரை 161இன் திருத்தம்.


5ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1983/02/25

முதலாவது பாராளுமன்றத்தில் ஏற்படும் வெற்றிடம் ஒன்றுக்கு உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளர் தவறுவாராயின், இடைத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்காக உறுப்புரை 161இன் திருத்தம்.


6ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1983 /08/08

உறுப்புரை 157இன் பின்னர் உட்புகுத்தப்பட்ட உறுப்புரை 157அவிற்கு அங்கீகாரமளிப்பதற்காக உறுப்புரை 101இன் திருத்தம்.

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறுவதற்கெதிரான தடை பற்றிய உறுப்புரை 167அ இன் உட்புகுத்தல்.

மேற்குறிப்பிடப்பட்ட உறுப்புரை 157அ மற்றும் அரசியலமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ள ஏழாவது அட்டவணை ஆகியவற்றிற்கு அங்கீகாரமளிக்கும் உறுப்புரை 161இன் திருத்தம்.

உறுப்புரை 157அ தொடர்பான பிரகடனத்தையும் உறுதிப்பிரமாணத்தையும் உள்ளடக்குவதற்கான ஏழாவது அட்டவணையின் சேர்க்கை.


7ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1983/10/04

நிர்வாக மாவட்டங்களை 25ஆக அதிகரிப்பதற்கான உறுப்புரை 5இன் திருத்தம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தைத் தோற்றுவிப்பதன் மூலம் தேர்தல் மாவட்டங்களை 25ஆக அதிகரிப்பதற்காக உறுப்புரை 96இன் திருத்தம்.

மேல் நீதிமன்ற ஆணையாளரை நியமிப்பது பற்றிய உறுப்புரை 111அ வின் உட்புகுத்தல்.

கிளிநொச்சியை ஒரு நிர்வாக மாவட்டமாகச் சேர்ப்பதற்காக முதலாவது அட்டவணையின் திருத்தம்.


8ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1984/03/06

இராணி வழக்கறிஞர் ஒருவர் அனுபவிக்கும் சிறப்புரிமைகளுடன் சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் தத்துவங்களை அதிகரிக்க உறுப்புரை 33இன் திருத்தம்.

திருத்திய உறுப்புரை 33இன் பிரகாரம் உறுப்புரை 136இன் திருத்தம்.

இராணி வழக்கறிஞர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் பற்றிய உறுப்புரை 169அ வின் உட்புகுத்தல்.


9ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1984/08/24

பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்படுவதற்கு தகைமை பெறாத அரசாங்க ஊழியர்களின் சம்பள அளவுத்திட்டங்களைத் திருத்துவதற்காக உறுப்புரை 91இன் திருத்தம்.


10ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1986/08/06

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரகடனம் ஒன்றுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்னும் தேவைப்பாட்டை நீக்குவதற்காக உறுப்புரை 155இன் திருத்தம்.


11ஆம் திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது - 1987/05/06

முதல் முறை குற்றவியல் நியாயாதிக்கத்தை மேல்நீதிமன்றத்திலிருந்து நீக்குவதற்காக உறுப்புரை 111இன் திருத்தம்.

அட்டவணையிடப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் தொடர்பாகவும் நீதிச்சேவை ஆணைக்குழு விதிகளை ஆக்குவதற்கு வகை செய்வதற்காக உறுப்புரை 112இன் திருத்தம்.

முதல்நிலை நீதிமன்றங்களிலுள்ள பிரதி பிஸ்கால்களை மேற்பார்வை செய்து அவர்கள்மீது கட்டுப்பாடடைப் பிரயோகிக்கும் பிஸ்கால் பதவியை உருவாக்குவதற்காக உறுப்புரை 113அ வின் உட்புகுத்தல்.

அட்டவணைப்படுத்தப்பட்ட அலுவலர்களை மட்டும் இடம் மாற்றும் வகையில் நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் தத்துவத்தை வரையறுப்பதற்கும் பிஸ்கால்களையும் அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க அலுவலர்களுள் உள்ளடக்குவதற்கும் உறுப்புரை 114இன் திருத்தம்.

ஒவ்வொரு நீதிபதிகள் குழுவிலும் அடங்கும் நீதிபதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக உறுப்புரை 146இன் திருத்தம்.

பிஸ்கால்களை பிரதிப் பிஸ்கால்களினால் பதிலீடு செய்வதற்காக ஐந்தாவது அட்டவணையின் திருத்தம்.


12வது திருத்தம் (இயற்றப்படவில்லை)

கெளரவ தினேஸ் குணவர்தன அவர்களினால் இது முதலாவது பாராளுமன்றத்தில் 1987-09-25ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், நி.க 47(5) ன் கீழ் அமைச்சரவை அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.


13வது திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது – 1987/11/14

தமிழை உத்தியோகபூர்வ மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் ஆக்குவதற்கு உறுப்புரை 18ற்கான திருத்தம்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பான உறுப்புரை 138ற்கான திருத்தம்.

ஒவ்வொரு மாகாணத்திற்கும் மாகாண சபை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக உறுப்புரை 154 A முதல் உறுப்புரை 154 T வரையான உறுப்புரைகள் உள்ளிட்ட அத்தியாயம் XVII A யினை உட்சேர்த்தல்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால ஒழங்கு விதிகளை உருவாக்குவதற்காக உறுப்புரை 155ற்கான திருத்தம்.

கீழம் மாகாண சபைகளினால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்களையும் எழுதப்பட்ட சட்டங்கள் எனும் வரைவிலக்கணத்தில் உள்ளடக்குவதற்காக உறுப்புரை 170ற்கான திருத்தம்.

ஒன்பது மாகாணங்களுக்கும் பெயரிடுவதற்காக எட்டாவது அட்டவணையையும், மாகாணசபைகள் பட்டியல், ஒதுக்கப்பட்ட பட்டியல் மற்றும் ஒருங்கியல் பட்டியல் ஆகியவற்றினை விபரிப்பதற்காக ஒன்பதாவது அட்டவணையையும் உட்சேர்த்தல்.


14வது திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது – 1988/05/24

குறிப்பிட்ட சட்ட விடயங்களில் சனாதிபதிக்கு சட்டத்தினால் பாதிப்பேற்படாத நிலைக்குரிய பாதுகாப்பிற்கு விலக்களிப்பதற்காக உறுப்புரை 35ற்கான திருத்தம்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 225 வரையில் அதிகரிப்பதற்காக உறுப்புரை 62ற்கான திருத்தம்.

ஒரு சட்டமூலம் பற்றி மக்கள் கருத்தறி வாக்கெடுப்பொன்றிற்கு மனுசெய்யப்பட்டிருக்குமிடத்து, அச்சட்டமூலத்தின் சான்றுப்படுத்தலானது சனாதிபதியினால் அங்கீகரிக்கப்படலாகாது எனும் நிபந்தனையினை உள்ளடக்குவதற்காக உறுப்புரை 80ற்கான திருத்தம்.

எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்காகவும் தேர்தல் மாவட்டங்களை வலயங்களாகப் பிரிப்பதற்காகவும் உறுப்புரை 96அ வை உட்சேர்த்தல்.

உறுப்புரை 96அ வை அமுல் படுத்துவதற்காக உறுப்புரை 98ற்கான திருத்தம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையினை அமுல்படுத்துவதற்காக உறுப்புரை 99னை பதிலீடு செய்தல்.

பொதுத்தேர்தல் ஒன்றில் ஒவ்வொரு கட்சியும் சுயாதீனக் குழுக்களும் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேசியப் பட்டியலில் இருந்து 29 உறுப்பினர்களைப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தொடர்பாக உறுப்புரை 99 அ வை உட்சேர்த்தல்.

மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு மனு அடங்கலாக தேர்தல் ஆட்சேபனை மனுக்கள் தொடர்பில் உயர் நீதி மன்றத்தின் நியாயாதிக்கத்தினை விஸ்தரிப்பதற்காக உறுப்புரை 130ற்கான திருத்தம்.


15வது திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது – 1988/12/17

தேர்தல் மாவட்டங்களை வலயங்களாகப் பிரிப்பதனை இரத்துச் செய்வதற்காக உறுப்புரை 96 அ வை நீக்குதல்.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டமும் தெரிவு செய்ய உரித்துக் கொண்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தேர்தல்கள் ஆணையாளர் சான்றுப்படுத்தல் தொடர்பாக உறுப்புரை 98ற்கான திருத்தம்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையிலுள்ள வெட்டுப் புள்ளியினை எட்டில் ஒன்றில் இருந்து இருபதில் ஒன்றாகக் குறைப்பதற்கும் தேர்தல் மாவட்டங்களை வலயங்களாகப் பிரிப்பதனை இரத்துச் செய்வதற்கும் உறுப்புரை 99ற்கான திருத்தம்.

இனத்துவ அல்லது வேறுவகையிலான எந்தவொரு இனத்திலிருந்தும், பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதன் தேசிய சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஒத்ததாக உள்ளதா என்பதனை உறுதிப்படுத்துவதற்காக உறுப்புரை 99 அ வி ற்கான திருத்தம்.


16வது திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது – 1988/12/17

மாகாணசபை உறுப்பினர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக இரு தேசியமொழிகளுள் ஏதேனுமொன்றை ஒன்றினைப் பயன்படுத்தக்கூடியதாக உறுப்புரை 20ற்கான திருத்தம்.

சிங்களத்தையும் தமிழையும் நிர்வாக மொழிகளாகவும் சட்டவாக்க மொழிகளாகவும் ஆக்குவதற்காக உறுப்புரைகள் 22 மற்றும் 23 னை பதிலீடு செய்தல்.

சிங்களத்தையும் தமிழையும் நீதிமன்ற மொழிகளாக ஆக்குவதற்காக உறுப்புரை 24ற்கான திருத்தம்.

வேறு ஏதாவது சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாமை ஏற்படுகையில், இந்த அத்தியாயத்தின் ஏற்பாடுகளை மேலோங்கி நிற்கச் செய்வதற்காக உறுப்புரை 25 அ வினை உட்சேர்த்தல்.


17வது திருத்தம் – சான்றுப்படுத்தப்பட்டது – 2001/10/03

அரசியலமைப்புச் சபையினை நிறுவுவதற்காக 41 A முதல் 41H வரையான உறுப்புரைகள் உள்ளடங்கலாக அத்தியாயம் VII A வை உட்சேர்த்தல்.

அரச சேவை ஆணைக்குழு தொடர்பான அத்தியாயம் IX னை உட்சேர்த்தல்.

சனாதிபதியினால் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் தொடர்பாக உறுப்புரை 65ற்கான திருத்தம்.

தேர்தல் ஆணைக்குழு தொடர்பாக அத்தியாயம் XIVA ஐ உட்சேர்த்தல்.

நீதிச் சேவை ஆணைக்குழு தொடர்பாக அத்தியாயம் XVA ஐ உட்சேர்த்தல்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பாக அத்தியாயம் XVIIA ஐ உட்சேர்த்தல்.


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom