முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு வைபவம் |
திகதி : | 2017-11-06 |
இலங்கை பாராளுமன்ற சனநாயகத்திற்கு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நடத்தப்பட்ட வைபவங்களுக்கு இணையாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவமொன்று 2017 நவம்பர் மாதம் 02ஆம் திகதி மு.ப. 11.30 மணிக்கு கௌரவ சபாநாயகர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதனை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் முன்னாள் பிரதம அமைச்சர் கௌரவ டீ.எம். ஜயரத்ன, பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்களான கௌரவ ஜோசப் மைக்கல் பெரேரா மற்றும் கௌரவ வி.ஜ.மு. லொக்குபண்டார ஆகியோரும் கௌரவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் உள்ளடங்கியிருந்தனர்.